Thursday 29 September 2011

நெத்திலிக் குழம்பு



நெத்திலிக் குழம்பை நேசிக்காத அசைவப் பிரியர்களே இருக்க முடியாது. எளிதாக சமைத்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப்பிட்டு பாருங்க.. சும்மா கும்முன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க... நெத்திலி குழம்பு வைக்கதானே......

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கை அளவு
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீ ஸ்பூன்
தனியா தூள் - 3 டீ ஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை - ஒரு குழிக்கரண்டி
கடுகு - ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணைய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.

* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போட்டு வதக்கணும்.

* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.

* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்களைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.

* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாருங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.


'செப்' தாமு 
கூடல் தளம்.

பேரீச்சம்பழ பாயசம்



இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது. ஒரு பேரீச்சம் பழத்தில் 23 கலோரிகள் உள்ளன என்பது வரப்பிரசாதம். நாவை இனிக்க வைக்கும் இனிப்புகளான பேரீச்சம் பழம் மற்றும் வெல்லத்துடன் தன் அதிவாசனையால் மனதை ஈர்க்கும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இனிக்க இனிக்க பேரீச்சம்பழ பாயசம் செய்யலாமா....?

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 1 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
வெல்லம் நறுக்கியது - 1/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தை சிறிது தண்­ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,

* ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:

* தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப்பாலை உபயோகிக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம்.

* ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதானது வெல்ல சுவையைத் தூக்கிக் காட்டும். வெல்லத்திற்கு பதிலாக தேவைப்பட்டால் சிறிது தேனும் உபயோகிக்கலாம்.

* மற்ற பாயசங்களில் இருந்து வேறுபட்ட சுவையுடன் இயற்கை இனிப்புடனும் கமகம மணத்துடனும் இருக்கும் பேரீச்சம் பழ பாயசம் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது என்றால் சரிதானே!

கீதா பாலகிருஷ்ணன் 
கூடல் தளம்.

கத்திரிக்காய் பிரியாணி



கத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா... கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க... அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா பாத்துக்கோங்களேன்!

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 1
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பால்(அ)தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு-எண்ணெய் - தேவைக்கு

வறுத்து பொடிக்க:

ஏலக்காய் - 3
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2

செய்முறை:

* வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்-தக்காளி-பச்சை மிளகாய்-இஞ்சி பூண்டு விழுது-வறுத்து பொடித்த பொடி-கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

* பிறகு உப்பு-மஞ்சள்தூள்-அரிசி-எலுமிச்சை சாறு-புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

* குறிப்பு: இதற்கு உருளை வறுவல் பெஸ்ட் காம்பினேஷன்.

எஸ். மேனகா 
கூடல் தளம்.

தேங்காய் ரசம்



என்னது.... தேங்காயில் ரசமானு யோசிக்கிறீங்களா... தேங்காயை எதுல சேர்த்தாலும் அதன் சுவையே அலாதிதான். அந்த வகையில் ரசத்துலயும் தேங்காய சேர்த்து பண்ணிப்பாருங்க... சுவையும் மணமும் சும்மா பட்டைய கௌப்பும்!

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்
பூண்டு - 5
தக்காளி விழுது - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம், கடுகு - சிறிதளவு
மெலிதாகச் சீவிய பூண்டு - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* தக்காளியை சுடு நீரில் வைத்து, 10 நிமிடம் கழித்து, மேல் தோல் நீக்கி விட்டு விழுதாக அரைக்கவும்.

* தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு தண்­ணீர் ஊற்றி, அதில் தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.

* பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மிளகு தூள், மல்லித்தூள் போட்டு லேசாக கொதிக்க விடவும்.

* நுரைத்து வந்தால் போதும். நெய்யில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

* ஆந்திர மக்கள் இந்த ரசத்தைப் பொங்கலுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது சாதத்துடன் பரிமாறவும் ஏற்றது.

(கூடல் தளம்)

ஹோம் மேட் சாக்லேட்



சாக்லெட் பிடிக்காதவங்களே இருக்க முடியாதுன்னு சொல்லலாம்...ஏன்னா அந்தளவுக்கு சாக்லெட்டுக்கு அடிமையாயிடுறோம்... அதுவும் வீட்டிலேயே செய்து கொடுத்தால் சுவை இன்னும் அதிகரிக்கும். இனிப்புடன் உங்க பாசமும் பளிச்சிடும். செஞ்சு கொடுத்து உங்க குழந்தைகளின் பாராட்டையும் அன்பையும் அள்ளிக்கோங்க.......




தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லேட் பார் - 1
பிரவுன் சாக்லேட் பார் - 1
முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் - தேவையானது

செய்முறை:

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் ட்ரை புரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* கேஸை ஒரே சூட்டில் வைத்திருக்கவும் அப்போது தான் சூடு மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரே எடுத்து அதனுள் ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.

* இந்த ட்ரேயை எடுத்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மெண்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு: கீழ் வைக்கும் பாத்திரத்தை விட, மேல் வைக்கும் பாத்திரம் பெருசாக இருக்க வேண்டும், அப்போது தான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இல்லைனா, கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் கம்மியானால், ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரே உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடற ஹோம் மேட் சாக்லேட் கம்மி செலவுல, வீட்டிலேயே பண்ணலாம். ட்ரைப்ரூட்ஸ் பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேபெர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கட், போலோ ஆகியவைகள்.

சுகந்தி
கூடல் தளம்.

காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!



சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவைகளை அறிந்துகொள்ள தவறிவிடுவோம். அதுபோன்று அஜாக்கிரதையாக விடப்படும் சிலவற்றுள் காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட்டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செலவழித்து நல்ல காய்களை தேர்ந்தெடுங்கள்.

* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.

* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.

* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.

* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.

* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.

* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.

* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.

* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.

* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!

* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.

பிரேமா அரவிந்தன்
 

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மானிட்டர்'!


நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

* சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

* தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.

* பசை, தண்­ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

* நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

* நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்பமாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மைதான்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கியூடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கியூடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.

* நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மானிட்டர்' போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு...

* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.

* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.

* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

* நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக்கொள்வது நலம்.

தீக்காயங்களுக்கு......!



பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்....

*  நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.

* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.

* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் - போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.

* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.

* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது 'ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.

* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.

* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.

* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.

* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.

* தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.

* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

source: www.koodal.com

சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற...!



சமையலறை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது... அழுக்கடைந்த சுவரும்... ஆங்காங்கே பாத்திரங்களும்... அப்படிப்பட்ட சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற... சில டிப்ஸ் இதோ...
சுத்தமான சுவர் அவசியம். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து அடுக்களை சுவர் மேலும் அழுக்காகிறது. இதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு. சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது தானே. மேலும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ளவும். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும்.
அடுத்து நல்ல அடுப்பு...! அடுப்பு வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த அடுப்புகளை வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும். சமையலறைக்கு முகம் போல அடுப்பு இருப்பதால் அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும்.
பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே... அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
வேலைக்கு செல்லும் பெண்கள், வேகமாக... சுவையாக... சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். சமையலறையில் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது. அதனால் ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் வேலையில் ஈடுபடும். குழந்தைகளுக்குள் சண்டை போடும் வாய்ப்பும் குறையும்.
அப்படி சமையல் வேலைகளை சொல்லும்போது சிறுமிகளுக்கு மட்டுமே சமையல் வேலைகள் என்று கொடுக்காமல் இருவருக்குமே அனைத்து வேலைகளையும் கொடுக்கலாம்.
இப்படி கொடுக்கப்படும் வேலைகளை குழந்தைகள் செய்ய யோசித்தால், உடனே உங்களுடைய கணவரை அழைத்து அந்த வேலைகளை செய்யச் சொல்லலாம். அப்படி அவர் செய்யும்போது, "அப்பாவே செய்யும்போது, நாமும் செய்தால் என்ன?" என்ற நினைப்பு, அவைகளுக்கு தோன்றும். சமையல் மட்டுமின்றி தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சமையலில் பருப்பை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகிற காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்கலாம். இட்லி வேக வைக்கும்போது, முட்டையையும் சேர்த்து வெக வைத்தால் எரிசக்தி, நேரம் எல்லாமே மிச்சமாகும்.
source: www.koodal.com

நவராத்திரி கொலு டிப்ஸ்!



உங்க வீட்ல கொழு வைக்கப் போறீங்களா... இதோ கோலாகலமான கொலுவுக்கு சில யோசனைகள்!

* உங்கள் பொம்மைகளுக்கு குறைந்த செலவில் உடனடி ஆபரணம் தயார் செய்ய வேண்டுமா? 3டி க்ளிட்டர்ஸ் கோல்டு கலர் வாங்கி, பொம்மைகளுக்கு கம்மல், நெக்லஸ், ஒட்டியாணம் என்று உங்கள் விருப்பப்படி அலங்கரியுங்கள். அலங்கரித்து முடித்ததும் 24 மணி நேரம் காயவைத்து எடுத்துவைக்க வேண்டும்.

* கொலுவில் மலை செட் வைக்கும்போது, சிறிய தகர டப்பாவைப் புதைத்து, அதிலிருந்து இன்ஸ்டன்ட் சாம்பிராணியை எரிய விட்டால், மலையில் பனிப்புகை வருவது போல அட்டகாசமாக இருக்கும். கொலு வைக்கும் இடமும் கமகமக்கும்.

* கொலுவுக்கு பொம்மை வாங்கியதும், மேலே வார்னிஷ் அடித்து விடுங்கள். தூசி படிந்தால்கூட தண்ணீ­ரில் நனைத்த துணியால் துடைக்கலாம். பொம்மைகளையும் பெயிண்ட் உரியாமல் பாதுகாக்கலாம்.

* அழகிய வடிவமுள்ள காலியான சென்ட் (அ) ஸ்பிரே பாட்டில்களின் மேல் பசை தடவி, சம்கி (அ) செயற்கை முத்து, பாசி ஒட்டி அலங்கரித்து, சிறிய பூங்கொத்துகளை செருகி கொலுப்படியின் இருபுறமும் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

* பழைய குக்கர் கேஸ்கட்டுகளை இரண்டாக வெட்டி. அதன் மேல் தங்க நிற பேப்பரை ஒட்டி, பார்க் மண்ணில் ஊன்றி வைத்து, அழகான, அலங்கார வளைவுகளை உருவாக்கலாம்.

* ஒரு தட்டையான, அகன்ற பாத்திரத்தில் தண்­ணீரை நிரப்பி, அதில் சின்ன பிளாஸ்டிக் வாத்து பொம்மைகளை மிதக்க விடுங்கள். கடையில் விற்கும் கலர் தெர்மாகோல் உருண்டைகளை வாங்கி, வாத்துகளுடன் கூடவே நீரில் போடுங்கள். நீரின் மேற்பரப்பில் ஜிகினாத் தூளையும் தூவி விடுங்கள். விளக்கு வெளிச்சத்திலும், பேன் காற்றின் அசைவிலும் உங்கள் செயற்கை குளம் ஜொலிக்கும்.

* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகை சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால் இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

* இடப்பற்றாக்குறை உள்ளவர்கள் சஞ்சலப்பட வேண்டாம். ஓரளவுக்கு உயரமான பலகையின் மேல் ஜரிகைப் புடவையை விரித்து, அதன் மேல் இரண்டு மரப்பாச்சி, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் பொம்மைகளை வைத்து, தரையில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் கோலம் வரைந்து அதன் மேல் ஜவ்வரிசி ஒட்டி விடுங்கள். இரண்டு பக்கத்திலும் முத்துபோல் விளக்கெரிய விடுங்கள். சிம்பிளாக இருந்தாலும் தெய்வீகமாகக் காட்சிதரும் உங்கள் வீட்டு கொலு!

* மக்காச்சோள சீசன் இது. சோளப்பருப்புகளை எடுத்துவிட்ட பிறகு, அதில் பச்சைக்கலரை பூசி காயவைத்து பார்க், மலைப்பகுதியில் நட்டு வைத்தால் அசோகமரம் நிற்பதுபோல் அழகாகக் காட்சியளிக்கும்.

* வாசலில் நவராத்திரி தினத்தில் கோலம் போட்டு செம்மண் (காவி) இடுவது வழக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில் காவிக்கு எங்கே போவது? கடன்வாங்கவும் மனது இடம் கொடுக்காது. நீங்களே இன்ஸ்டன்ட்டாக காவியைத் தயாரிக்கலாம். 50 கிராம் மஞ்சள்தூளில் காய்ந்த சுண்ணாம்புத் தூள் ஓர் ஸ்பூன் கலந்து வைத்துக் கொண்டால், வேண்டும்போது தேவையான அளவு எடுத்து தண்­ணீர் விட்டுக் குழைத்து வாசலில் செம்மண் பார்டர் போல இடலாம். மஞ்கள் வாசனை தூக்கலாக இருக்கும். பூச்சிகள் வராது. (இது கிருமிநாசினிகூட!) செக்கச் செவேர் என்று பளிச் சென்று இருக்கும். ஆரத்தி எடுக்கவும் இதையே பயன்படுத்தலாம்.

* பூஜை அறை செட்டில் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் பூ வைக்கவேண்டும் என்றால் கொண்டை ஊசியில் கோர்த்து வைத்தால் பூவும் கீழே விழாது, பார்க்கவும் அழகாக இருக்கும். காய்ந்ததும் சுலபமாக எடுக்கலாம்.

* கொலுவில் பார்க், ப்ளே கிரவுண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்றவைகளுக்கு வேலிகள் அமைக்க தீக்குச்சிகளை உபயோகப்படுத்தினால் அசத்தலாக இருக்கும்.

* பசுமையாக செடிகள், புல்தரை ஆகியவற்றை அமைக்க, தேங்காய்ப்பால் எடுத்த தேங்காய் சக்கையை பச்சைக் கலர் கலந்து காயவைத்து பயன்படுத்தலாம்.

* சிலர் வீட்டில் மலைகள் அமைத்து அதன் மீது கோபுரம், சுவாமி வைப்பது வழக்கம். மலை செய்யும்போதே, மண் ஈரமாக இருக்கும்போது விரலினால் 2 இன்ச் நீளத்திற்கு குழி செய்து காயவிடவும். இந்தக் குழிகளில் ஆங்காங்கே சாம்பிராணி வத்தி சொருகி வைத்து ஏற்றிவிட்டால், மலையிலிருந்து புகைவருவது போல தெய்வீகத் தோற்றம் தரும்.

* தெப்பக்குளம் கட்டி அதில் மீன், கப்பல், ஓடம் (போட்) மிதக்க விடுவார்கள் சிலர். தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீ­ரில் இங்க் அல்லது துணிக்கு போடும் நீலப்பவுடரை கொஞ்சம் கரைத்துவிட்டால், அசல் குளத்து தண்ணீ­ர் போல தோற்றம் அளிக்கும்.

* கொலுப்படிகளில் விக்கிரகங்கள் வைப்பது வழக்கம். இந்த விக்கிரகங்களை மண்ணெண்ணெய் தடவி, விபூதி போட்டு துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.

* கொலுவில் அமைக்கும் பார்க்கில், செடிகளைத் தொட்டியில் வைப்பது வழக்கம். கடுகு அல்லது கேழ்வரகை இரண்டு மணி நேரம் ஊறப்போட்டு தண்ணீ­ர் வடித்து, பிளாஸ்டிக் கிண்ணத்தில் மண் நிரப்பி மேலே இதனைத் தூவி விட்டு தண்­ணீர் தெளித்தால், சீக்கிரம் முளைத்து செடி போல இருக்கும். மற்ற தானியங்கள் முளைக்க தாமதம் ஆகும்.

* பெரிய சாக்லெட் டப்பாக்களில், சாக்லெட் குழிவான பிளாஸ்டிக் அட்டையில் பேக் செய்து வரும். அந்த பிளாஸ்டிக் அட்டையை எடுத்து, குழியில் தானியங்கள் வைத்து கடையில் விற்பனை ரேக்கு போல வைத்து அலங்கரிக்கலாம். பக்கத்தில் செட்டியார் பொம்மை ஒன்று வைத்து விட்டால், செட்டியார் கடை போல தோற்றம் அளிக்கும்.

* பார்க், ஏர்போர்ட், ரோடு போன்று அமைக்கும்போது உபயோகப்படுத்திய பழைய கொசுவத்தி மேட்களை தரையில் நீளவாட்டில் அமைத்தால் பிளாட்பாரம் போல் தெரியும். உலர்த்திய காபி பொடியை தார்ச் சாலை போல் (விமான ஓடுதளமாகவும்கூட) அமைத்து அழகுபடுத்தலாம்.

* வெற்றிலை-பாக்கு, மஞ்சள், குங்குமம், நாணயம் போன்றவைகளை சிறு கவரில் போட்டு வைத்துக்கொண்டால், கொலுவுக்கு வருபவர்களுக்கு சட்டென்று எடுத்துக் கொடுக்கலாம். அந்த நேரத்தில் ஒவ்வொன்றாகத் தேடி அலையும் டென்ஷனைத் தவிர்க்கலாம்.

* நவராத்திரியில் கொலுவின் கீழ் ரங்கோலி, நீர்மேல் கோலம், தண்ணீ­ருக்கு அடியில் கோலம் ஆகியவற்றைப் போட்டு வைத்து அழகுபடுத்தலாம்.

குறிப்பு:-இவை தமிழ் கூடல் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

நம்மை நாமே பார்ப்போம்!

கல்யாணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்கிறபோது உங்கள் முகபாவம் "பாடி லாங்வேஜ்" எப்படி இருக்கிறதென்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?"

இந்தக் கேள்வி எனக்கு வித்தியாசமாகப் பட்டது. "நாம் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகளின் வீடியோ காஸெட்டை உறவினர்களிடம் வாங்கி வந்து வீட்டில் தவறாமல் போட்டுப் பார்க்க வேண்டும். அதில் நம்முடைய நடை, முகபாவம் மற்றும் அங்க சேஷ்டைகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். எங்கோ "பராக்"குப் பார்ப்பது, தோல் பட்டையை ஒரு பக்கமாய்ச் சாய்த்து நடப்பது, பிறர் கூறுவதை வாய் திறந்தபடி கேட்பது, "கெக்கே பிக்கே" சிரிப்பு என பல தப்பான மானேரிஸங்களுடன் இருக்கின்ற நம்மை கனகச்சிதமாகத் திருத்திக் கொண்டு "பர்சனாலிட்டி"யை வசிகரமாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

நீங்களும் அப்படி உங்களைப் பாருங்களேன். சொன்னது அற்புதமான யோசனைதான் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள்
.

Wednesday 28 September 2011

உடற்பயிற்சி உடலில் புதிய எலும்பை உருவாக்குகிறது!

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தற்போது இதனால் புதிய எலும்புகள் உருவாகுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடலில் தேவையாற்ற கொழுப்பு ஏற்பட்டு நோய் ஏற்படுகிறது. அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் சக்தி வாய்ந்த ஸ்டெம் செல்களில் உடனடி மாற்றம் நிகழ்ந்து அவை எலும்பாக மாறுகிறது.

இதற்கான ஆய்வை அமெரிக்காவில் உள்ள மேக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எலியின் மூலம் மேற் கொண்டனர். டிரெட்மில் என்ற உடற்பயிற்சி சாதனத்தின் மூலம் ஒரு எலிக்கு தொடர்ந்து உடற்பயிற்சி அளித்தனர்.

அந்த எலியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு எலும்பு உருவானது. அதே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தாத எலிகளின் உடலில் எலும்புக்கு பதிலாக கூடுதல் கொழுப்பு ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி உடலில் புதிய எலும்பை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Monday 26 September 2011

அழகான நகங்கள் வேண்டுமா?


இதோ சில டிப்ஸ்....

  • நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.
  • நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
  • மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
  • ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.
  • தினமும் நெயில் பாலிஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும்.எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலிஷ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது.


Friday 16 September 2011

சாக்லெட் சாப்பிடுங்க


                 'ஜிம்' போகாமல் 'ஜம்' மென இருக்க   
                தினமும் சாக்லெட் சாப்பிடுங்க.


          உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க தினமும் காலையில் 'ஜிம்' போய் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பல் கொள்பவரா நீங்க....? இனி,ஒரு சாக்லெட் பார் சாப்பிட்டு விட்டு போர்வைக்குள் ஒளிந்து தூக்கத்தை தொடரலாம் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராயிட் நகரில் உள்ள வேய்ன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு நடத்திய ஆராய்ச்சியில இது கண்டுபிடிக்கப்பட்டது.


                              உடற்பயிற்சிக்கும் சாக்லெட்டுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆராயப்பட்டது. தீவிர உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும்போது உடல் தசைகளை இறுகச் செய்யும் எபிகாடெக்கின் என்ற வேதிப்பொருள் சாக்லெட்டிலும் இருப்பது தெரிய வந்தது.



               உடற்பயிற்சி செய்வதால் தசைக்கு அளிக்கப்படும் ஊக்கம் போலவே சாக்லெட்டில் இருக்கும் எபிகாடெக்கின் செயல்படுவது உறுதியானது. தினமும் சாக்லெட் சாப்பிட்டால் கடின உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான பலனை பெற முடியும் என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

             ஓட்டம்,சைக்கிள் ஒட்டுதல் ஆகியவற்றால் எபிகாடெக்கின் அதிகரித்து தசை செல்கள் ஊக்கம் பெறுகின்றன.அதே பயன் சாக்லெட்டிலும் கிடைக்கிறது.குறிப்பாக இதயம் மற்றும் எலும்புகளை சுற்றியுள்ள தசைகளில் இது சிறப்பாக செயல்படுகிறது.எனவே உடற்பயிற்சியின் பயனை சாக்லெட் அளிக்கும்.

இந்த ஆய்வு முடிவுகள் சைக்காலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளன.


Monday 12 September 2011

உமிழ்நீர்

             ணவானது வயிற்றில் முழுவதும் செரிக்கப்படுவதில்லை. செரிமானத்தின் பாதிவேலை வாயிலேயே முடிந்துவிடுகிறது.வயிற்றிலுள்ள செரிமானத்தின் அமைப்பு வாயில் அரைதுச்செல்லப்ப்படும் உணவினையே செரிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.ஆகவே உண்போர்,உட்கொள்ளும் உணவினை வயிற்றுக்குள் செல்லுமுன்,அது வாயிலேயே நன்றாய் அரைத்து குழைவாக மாற்றி பின்பு வயிற்றினுள் இறங்குமாறு செய்தல் அவசியம்.
நன்றாய் அரைத்து குழைத்து இறங்குவதுற்கு ஏற்பதான் வாயினுள் பற்களும்,உமிழ்நீரும் இயற்கையால் வழங்கப்பட்டுள்ளதை மானிடர்கள் அறிய வேண்டும்

                             "நொறுங்கத் தின்றால் நூறு வயது"

       என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்றே.சிலர் இதை தவறாக பொருள் கொள்ளக்கூடும்.இதன் உண்மை என்னவெனில்,வாயிலேஉணவை நொறுங்க(குழைவாக்கி)வைத்து பாதி வேலையை வாயிலேயே முடித்து இறைப்பைக்கு அனுப்ப வேண்டும்.அதுவே நன்றாக செரிமானம் ஆகும்.அவ்வாறுதான் இயற்கை அமைந்துள்ளது.இயற்கையோடு ஒத்துழைத்து வாழ்ந்தால், உண்டால் நூறு வயது வாழ முடியும்.கோழி விழுங்குவது போல் எந்த உணவை உண்டாலும் செரிமானத்திற்கு கடினப்படும்.மேலும் ஆயுளும் குறையும்.

                      நோயில்லாமலும்,நூறு வது வாழும் எண்ணம் உடையவர்கள் நொறுங்க உண்டால் வாழலாம்.

                  பற்கள் உணவினை பிளந்து,பொடியாக்குவதகாகவே உள்ளன.உமிழ்நீர் உணவினை குழைவாக்குவதோடு அதன் கண்உள்ள காடிநீர்,உணவில் உள்ள பசைமாவுப் பொருட்களை சர்க்கரையாக்கி சூட்டினை ஏற்ப்படுத்தி வயிற்றுனுள் செரிக்க எதுவாக தயாராக்கப்படுகிறது.இதுபோன்ற பலத்தன்மைகள் உமிழ்நீரில் உள்ளது.எந்த உணவுப்பொருட்கள் என்றாலும் உமிழ்நீரில் நன்றாக கலந்து அரைத்து வயிற்றினுள் சென்றால் நல்ல செரிமானம் ஆகும்.நோயும் ஏற்படாது.

                      வயிற்றுப்புண்,வயிற்றுவலி,செரியாமை போன்ற நோய்கள் உணவினை வாயில் உமிழ்நீருடன் சேர்ந்து அறைக்காமையால்தான் ஏற்படுகிறது.எந்த உணவுப் பதார்த்தங்களையும் நன்றாக ரசித்து,சுவைத்து,அரைத்து உண்ணுதல் நலம் பயக்கும். மாறாக விலுங்குவதால் வீணே அவ்வுணவு மலக்குடலில் கழிகிறது.

Sunday 11 September 2011

எடுப்பான 'லிப்ஸ்டிக்' போடுவது எப்படி?

               ண்ணிற்கு மை அழகு என்பார்கள்.
அதுபோன்று உதட்டிற்கு அழகு லிப்ஸ்டிக்.இதுதான் இன்றைய இளம் மங்கையரின் தாரக மந்திரம்.


               சிறுமிகள் முதல் எல்லாப் பெண்களும் விரும்பி உதட்டில் போட்டுக்கொள்ளும் லிப்ஸ்டிக்கை சரியாக தேர்வு போடுவது நல்லது.


              சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.ஆனால் மாநிறமாகவோ ,கருப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.


             கருப்பான தேகம் கொண்டவர்கள் மிகவும் 'லைட்'ஆகவோ அல்லது 'டார்க்'ஆகவோ இல்லாமல் பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.


            மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுகொண்டால் அழகாக இருக்கும்.
           வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால் எடுப்பாக இருக்கும்.

தொந்தரவு தருகிறதா உதடு வெடிப்பு?

               சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி,அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது.உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும்.இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து,வெடிப்புகளும் ஏற்படும்.


இதோ தீர்வு......


               பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால்,உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.


       
              வெண்ணையுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

தேனின் மகத்துவம்

                   தேன் சிறப்பான உணவு.எளிதில் செரிமானம் ஆகக்கூடியது .ஒரு கூட்டு குடும்பமாக மிகப்பெரிய நிர்வாக வசதியோடு ஆட்சி செய்து வருவது தேனீக்கள்.இராணித்தேனீ,காவல் தேனீ,வேலைக்காரத் தேனீ,மருத்துவ தேனீ,ஆண் தேனீ போன்ற பலதுறை சம்பந்தப்பட்ட தேனீக்கள் தேனாடையில் உள்ளன.
  • அதிநுட்பமான நுண்ணறிவு கொண்டவை தேனீக்கள். 
  • நிமிடத்திற்கு 16000 தடவைக்குமேல் இறகை அடித்துக்கொள்ளும்.
  • சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை நுகர்ந்து தெரிந்து கொள்ளமுடியும்.


  • ஒரு தேனீக்கு 5000 நாசித்துவாரங்கள் உள்ளன.
  • சுமார் ஒரு தேக்கரண்டி தேனை சேகரிக்க தனது வாழ்வையே கொடுக்கிறது.
  • ஒரு பவுண்டு தேனை சேகரிக்க எறக்குறைய 80000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. 
  • 60000 மலர்களுக்கு முப்பத்தேழு லட்சம் தடவை தேனீக்கள் பறந்து செல்ல வேண்டியிருக்கிறது.                                                                                                                

இத்தனை கடினப்பட்டு தேனை சேகரிக்கின்றன.


                மனிதகுலம் தேனீக்களின் மகத்துவத்தை அறிந்து தேனை பயன் படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

தேனின் சத்துப்பொருட்கள்:


                  தேனில் பொதுவாக முப்பத்திநான்கு சதவிதம குளுக்கோஸ்,நாற்பது சதவிதம் பழச்சர்க்கரையும்,இரண்டு சதவிதம் மற்ற சர்க்கரை வகையும் அடங்கிஉள்ளன.கெட்டுப்போகாத ஒரு உணவு.

                  [புலால் உணவில் தான் அதிகமான அளவு சத்துகள் இருப்பதாக பெரும்பாலான கருத்தியல் வாதங்கள் நிலவுகின்றன.புலால் உண்பதினால் என்ன உடல் மாற்றத்தை எதிர் பார்கிரீர்களோ அதை தேன் சாப்பிடுவதால் அடைந்து விடலாம்.]

தேனின் சிறந்த பயன்கள்:
  • கண்களுக்கு குளிர்ச்சி தரும்
  • காயங்களை ஆற்றும்
  • உடலுக்கு நல்ல நிறம் தரும்
  • நாடிகளைச் சுத்தப்படுத்தும்
  • அறிவை வளர்க்கும்
  • சுவாசக் கோளாறு நீங்கும்
  • வயிற்றுக்கடுப்பு,கிருமிநோய்,தாகம்,வாந்திபேதி நீங்கும்
  • தீப்புண்,விக்கல்,மலச்சிக்கல் குணமாகும்
  • பசியை ஏற்படுத்தும்
  • ஜீரணத்துக்கு உதவும்
  • கொழுப்பை கரைக்கும்
  • மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.
  • வாய்ப்புன்னுக்கு நல்லது
  • நீரழிவு நோய் நீங்கும்
  • வெட்டுக்கயங்களில் தேனை தடவினால் விரைவில் ஆரும்
  • தேள் கொட்டிய இடத்தில் தேனை தடவினால் எரிச்சல் குறையும்.
  • இதயம் பலமாகும். தேனாடையில் படிந்திருக்கும் தேனின் மெழுகை நன்றாய் மென்று விழுங்கினால் ஆஸ்மாவிற்கு நல்லது.
  • மூச்சித்திணறலை எளிதில் நீக்கும்.          
           எனவே தேனை சரியாக பயன் படுத்தி பயன் பெறுங்கள். நலம் பெருகட்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                       படைப்பு - க.ராஜா (MA,M.Phil,B.Ed)
                                  திருநெல்வேலி 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys